அன்பான நண்பரே,
நவம்பர் 5, சனிக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 9 மணி வரை இறந்தவர்களை நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்துவதற்கான ஓர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களை இந்நிகழ்விற்கு அன்பாக அழைக்கின்றோம்!
மெக்சிக்கோவில் பொது விடுமுறை (இவ்வருடம் நவம்பர் 2 ம் திகதி அனுசரிக்கப்படுகின்றது) வழங்கப்பட்டு, இறந்த முன்னோர்களை நினைவு கூறுவது வழக்கம். எமது WAC குடும்பத்தினை பொருத்த வரையில் எங்களால் அன்பு செலுத்தப்பட்டு, இறந்தவர்களை எமது பல்வேறு கலாச்சார பாரம்பரியங்களின் அடிப்படையில் எவ்வாறு நினைவு கூறுகின்றோம் என்பதனை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பமாக நாம் இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொள்வோம். நீங்களும் வந்து பல்வேறு பாரம்பரிய முறைகளை பார்த்து ,அறிந்து கொள்வதுடன் பாரம்பரிய உணவுகளையும் ருசி பார்த்து செல்லுமாறு அழைக்கின்றோம்.
மாலை 6 மணிக்கு பல்வேறு கலாச்சாரங்கள் பற்றியும் அனைவருக்கும் குடியுரிமை அந்தஸ்து வேண்டும் என்பது தொடர்பிலும் சிலர் உரையாற்றுவார்கள். நீங்கள் சமூகமளிக்கமுடியுமாயின் அது பற்றியும் உங்களுடன் எத்தனை பேர் வருகின்றார்கள் என்பது பற்றியும் தயவு செய்து எங்களுக்கு தெரிவியுங்கள்.
இறந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு(Day of the Dead)
சனிக்கிழமை, நவம்பர் 5, மாலை 5-9 மணி
தொழிலாளர் நடவடிக்கை நிலையம், 720 ஸ்பெடைணா அவனியூ, #202
நீங்கள் மாலை 5 pm தொடக்கம் வருகை தரலாம்.
நிகழ்வுகள் மாலை 6 pm ஆரம்பிக்கப்பட்டு, 7 pm யிலிருந்து சிறப்பு நிகழ்வுகளுடன், உணவு பரிமாறி, 9 pm க்கு நிறைவு பெறும்.
பதிவுகளுக்கு, ஈமெயில் அனுப்ப வேண்டிய முகவரி: David@workersactioncentre.org
|